பிரிட்டிஷ் பேரரசில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த - நமது அண்டை நாடான - பர்மாவின் நேற்றைய - இன்றைய வரலாற்றையும் பண்பாட்டுப் பெருமையையும் இன்றைய அவலத்தையும், இளமைக்காலத்தில் அங்கு வாழ்ந்த நூலாசிரியர் அனுபவபூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரிட்டிஷ், ஜப்பானிய ஆதிக்கத்தின் கீழ் ப..
கமலா தாஸ் அனுபவத்தின் ஊற்றுக்கண்களைத் தேடிச்சென்ற எழுத்தாளர். திரைகளை அகற்றிய போது கண்ட வாழ்க்கையின் உள்ளொளியைப் பதிவுசெய்வதில் அவர் காட்டிய ஆன்மிகம் சார்ந்த நேர்மையால் மலையாள இலக்கியத்தைக் கடந்து அவரது குரல் இந்திய இலக்கியத்தில் கவனத்தைப் பெற்றது. பெண்மையின் அகப்படாத ரகசிய வியப்புகளை வெளிப்படுத்தும..
தமிழுக்கு மிக அணுக்கமான மொழியாக இருந்தும் தெலுங்கில் நடைபெறும் இலக்கியச் செயல்பாடுகள் நமக்குத் தெரியவருவதில்லை என்ற குறையைப் போக்கும் முயற்சியில் சின்ன அடிவைப்பு இந்தச் சிறுகதைத் தொகுப்பு. ஸ்ரீ விரிஞ்சியின் பத்து கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பு ருசிகரமான வாசிப்புக்குரியது. இந்தக் கதைகளின் பின்னணி ..
வேடிக்கைக் கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் 'பாத்துமா வின் ஆடு'. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கு..
பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்டது இந்நாவல். அகதிகள் புகலிட தேசத்தில் உயிர்த் தரித்திருப்பதற்கான விழைவை மட்டுமே கொண்டவர்கள் என்று பொதுப்புத்தியில் படிந்துபோயிருக்கும் சித்தி..
மகாபலிபுரம் (அல்லது மாமல்லபுரம்), 7ஆவது, 8ஆவது நூற்றாண்டு வாக்கில், காஞ்சிபுரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இங்குள்ள கட்டடங்கள் அவற்றின் கட்டடக்கலைக்காகப் போற்றப்படுகின்றன. குடைவரை கோயில்கள் தொடங்கி தனித்த..
எண்பதுகளிலிருந்து அறியப்பட்ட எழுத்தாளரான சந்திரா இரவீந்திரன் பல சிறந்த சிறுகதைகளைத் தந்தவர். அவரது மொழிநடை தனித்துவமானது. மனதின் உணர்வுகளை அப்படியே உருவி எடுத்துத் தன் மொழியில் படையலிடுபவர்.
இப்போது தன் மாமியின் அனுபவங்களை, அவருக்குள் இருந்த உணர்வுகளைச் சிறிதும் குறையாமல் இங்கே பதிவுசெய்திருக்கிறார..
மீண்டும் வேதாளம் கதைசொல்ல ஆரம்பித்தது: உலகில் ஒரே ஒரு முற்போக்காளன் இருந்தான். அவன் முன்னோக்கி நடந்தான். அவன் நீண்ட நடை நடந்தான். நடந்தான், நடந்தான், நடந்தான். ஆயினும் என்ன இவன் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். “இவன் முற்போக்காளனா, பிற்போக்காளனா, திரிபுவாதியா, இடைத்தரிப்பாளன..
சுந்தர ராமசாமி எழுதி, ஏற்கெனவே இதழ்களில் வெளிவந்த ‘உடல்’, ‘யந்திரத் துடைப்பான்’ நாடகங்களும் இதுவரை பிரசுரமாகாத ‘டாக்டர் நாகராஜன்’ நாடகமும் முதன்முதலாக நூல் வடிவம் பெறுகின்றன. சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல நிலைகளிலும் சிறப்பாக வெளிப்பட்டுள்ள சுந்தர ராமசாமியின் ஆளுமை நாடகங்களி..
“மொழி என்பது அகராதிகளிலும் இலக்கண நூல்களிலும் மட்டும் அடங்கிவிடும் ஒரு திட்டவட்டமான அமைப்பு அல்ல. அது, தான் புழங்கும் பண்பாட்டுச் சூழலின் உயிரோட்டமான பிரதிபலிப்பு. அகராதிகளாலும் இலக்கண நூல்களாலும் ஒருபோதும் முழுமையாக வரையறுத்துவிட முடியாத பண்பாட்டுத் தளத்தைத் தன் ஊற்றாகக்கொண்ட இடையறாத நீரோட்டம்..
கொங்கணி மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு நூல்வடிவில் வெளிவரும் முதல் படைப்பு ‘யார் அறிவாரோ’. காட்டில் தனிமையில் வாழும் வனப்பாதுகாவலாளி ஒருவன் தன்னை எரிக்கும் காமத்தை எதிர்கொள்ளும் விதமும் அதனையொட்டிய மனப் போராட்டங்களுமே கதையின் மையம். வாசிப்போரின் அகத்தே விளம்பும் எண்ணற்ற செய்திகள் கதையிலு..
பேராசிரியர் கா. கைலாசநாத குருக்கள் ஈழத்து சமஸ்கிருத சிந்தனை மரபின் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் சமஸ்கிருதப் பேராசியராகப் பணியாற்றியவர். யாழ் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியராக்க் கௌரவிக்கப்பட்டவர். வடமொழி இலக்கிய வரலாறு, சைவத் த..
வரலாறும் வழக்காறும்கல்வெட்டுக்கள், பட்டயங்கள், இலக்கியங்கள், பயணக்குறிப்புகள், தோல்லியல் சான்றுகள், நாணயங்கள், அரசு ஆவணங்கள் ஆகியன வரலாற்று வரைவில் சான்றாதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. ..
வாகன விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவரது உடலைப் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் கிடக்கும் செதெரீக்கின் தலையுடன் இணைக்கும் உறுப்புமாற்று அறுவைச்சிகிச்சை வெற்றி பெறுகிறது. செதெரீக்கின் தந்தை பெரும் செல்வந்தராகையால் இது சாத்தியமானது. இந்த அறிவியல் புரட்சியின் தலைமகன் செதெரீக் உடல் உபாதைகள், உளவியல் ச..